இத்தாலி நாட்டில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் 4 பேர் பலி
அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இத்தாலி நாட்டில் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த 4 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.பயிற்சிக்காக சென்றபோது இத்தாலி நாட்டில் அவியானோ என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ தளம் உள்ளது. இங்கு உள்ள விமான தளத்தில் இருந்து தான் ஈராக்குக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. இந்த விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. அதில் விமானப்படை வீரர்கள் 11 பேர் இருந்தனர். பயிற்சிக்காக அவர்கள் இந்த ஹெலிகாப்டரில் சென்றனர். 2 துண்டுகளாக உடைந்தது ஹெலிகாப்டர் ட்ரெவிசோ என்ற நகரில் பறந்து கொண்டிருந்தபோது, திடீர் என்று வயல் வெளியில் விழுந்து 2 துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவம் பகல் 12.40 மணிக்கு நடந்தது. இதில் இருந்த 4 விமானப்படை வீரர்கள் பலியானார்கள். மற்றும் 7 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த விபத்தை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் பார்த்து விட்டு தீ அணைப்பு படையினருக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வெனிஸ் நகரில் இருந்து மீட்புக்குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.