வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ் வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி – செனன் வூட்லேண்ட் பகுதியில் இன்று (20) காலை பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது.
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அவ் வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்நது.
எனினும் அதன் பிறகு பொலிஸார் மற்றும் பிரதேசமக்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
Average Rating