எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் – பொன்சேகா!!
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம், எனவும் அவர் கூறியுள்ளார்.
போரின் போது பாலியல் பலாத்காரக் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சரத் பொன்சேகா இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் இந்திய அமைதிப்படை 1987 ஜூலை முதல் 1990–ம் ஆண்டு மார்ச் வரை இலங்கையில் முகாமிட்டிருந்தது. அப்போது அவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. அதேபோன்று ஈழப்போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டுகள் பரப்பபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு அதாவது இலங்கை அரசு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 2000–ம் ஆண்டு எட்டு தமிழர்களை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு கடந்த ஜூன் மாதம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதுபோன்று உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்று நியாயமான தீர்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் உள்நாட்டில் வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating