பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இவ்வாறு கிடைக்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் தவறவிட்டுள்ளனர் என்று ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் சர்வதேசப் பங்களிப்புடன் ஒரு உள்ளகப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட வேண்டுமென அந்த அறிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களாகிய நாம் சர்வதேச விசாரணையா? அல்லது உள்ளக விசாரணையா? என்ற தேவையற்ற தர்க்கத்தில் ஈடுபட்டுக் காலத்தை வீணடித்து விடக்கூடாது. ஏனென்றால் முன்னர் அரசியல் வழிமுறைப் போராட்டங்கள், ஆயுத வழிமுறைப் போராட்டங்கள் என்பவற்றைக் கடந்து இந்தத் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக நிற்கின்றார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள இன்னொரு வாய்ப்பாகவே மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையை தமிழ் மக்களின் தலைமைகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் சரியான வகையில் அணுக வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யவும், உண்மைகள் கண்டறியப்படவும், இழப்புக்கள், பாதிப்புக்களுக்கு உரிய பரிகாரம் காணவும், அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்ளும் கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளவும் முடியுமாக இருக்கும்.
விசாரணைகளுக்கான பொறிமுறை எவ்வாறானதாக அமைந்தாலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் கலாசாரங்களோடு நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருக்கும் இந்திய அரசும் உள்வாங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீடித்த நிலையான தீர்வொன்றைத் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே, தற்போதைய முக்கியமான காலகட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஆளுக்கொரு பக்கமாக நின்று விமர்சிப்பதாலோ, விவாதிப்பதாலோ நன்மையேதும் இங்கே நடந்துவிடாது. எனவே, அரசியல் மற்றும் இதர பேதங்களைக் கடந்து தமிழ் அரசியல் தலைமைகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றுபட்டு ஐநாவின் பொறிமுறையை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்த அவசியமான முயற்சிக்கு சக தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் நலன்சர்ந்து செயற்படும் அனைத்துப் பொது அமைப்புக்கள் ஆகியோரை பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவமாறு தமிழ் மக்களின் சார்பாகப் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating