சேயா கொலை சந்தேகநபர்கள் மீது DNA பரிசோதனை!!
Read Time:1 Minute, 4 Second
கொட்டதெனியாவ சேயா சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி கொலை தொடர்பில் 17 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த இரகசிய பொலிஸார் தீர்மானித்துள்ளதுடன், மினுவாங்கொட நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating