6 மாதத்தில் 85 குழந்தை பெற்ற பெண் – அசாமில் வினோத மோசடி!!
அசாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 6 மாதத்தில் 85 குழந்தை பெற்றதாக கூறி அரசின் உதவி தொகையை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லில்லி பேகம் லாஸ்கர் என்ற பெண் அசாம் மாநில அரசின் கிராமப்புற சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அம்மாநில பெண்கள், பாதுகாப்பாக குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 ரூபாய் உதவித் தொகை அளிக்கிறது அசாம் அரசு. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த லில்லி பேகம், தனது பெயரில், கடந்த 6 மாதத்தில் 85 குழந்தை பெற்றதாக அரசுக்கு பொய்யான தகவலை அளித்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இது பற்றி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது, இதனை அடுத்து லில்லி பேகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Average Rating