சமையல்காரர் கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!
புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் மின்வாரியம் அருகே உள்ள குட்டையில் கடந்த மாதம் 16–ந்தேதி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கொருக்குபேட்டை சேர்ந்த காதர் முகைதீன் என்பதும் பிரியாணி கடையில் சமையல்காரராக இருந்தார் என்பதும் தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.
கொலையாளிகளை பிடிக்க புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய் சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் காதர் முகைதீனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் சேட் என்ற கார்த்திக் (27), மூர்த்தி (28) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் மீது 2 கொலை வழக்கு உள்ளது.
பணத்தகராறில் காதர் முகைதீனை கொலை செய்ததாக அவர்கள் கூறினார்கள். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating