மட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..!!
மட்டக்களப்பு பண்ணையடி கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்து சென்று கடந்த முதலாம் திகதி இரவு 10 மணியளவில் சந்தேகநபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating