பாதி தலையுடன் பிறந்த குழந்தை, போராடும் பெற்றோர்க்கு குவியும் ஆதரவு: வீடியோ…!!
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் நிதி உதவி பெற்று அதிலிருந்து மீண்டு வருவது மருத்துவ உலகில் இயல்பான ஒன்று. ஆனால் ஜாக்சனின் கதை அது போன்ற ஒரு இயல்பான கதை அல்ல.
microhydranencephaly என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஜாக்சனை வெளியே கூட்டிச் சென்றால் பார்க்கும் பலர் பயப்படுவார்கள். சிலர் அருகில் வந்து ஜாக்சனின் பெற்றோரிடம் துக்கம் விசாரிப்பார்கள். இவ்வளவு ஏன், குழந்தைகள் கூட அவனுடன் விளையாட விரும்பமாட்டார்கள்.
அமெரிக்காவில் 5 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த அரிய நோயால் பாதிக்கப்படுகிறது. நோய் தாக்கிய சில மாதங்களிலேயே அந்த குழந்தை இறந்தும் விடுகிறது. ஆனால் பெற்றோரின் அன்பு தரும் நம்பிக்கையாலும், கவனிப்பாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளான் ஜாக்சன்.
ஜாக்சனுக்கான பேஸ்புக் பக்கத்தை(https://www.facebook.com/WeAreJaxonStrong) லட்சக்கணக்கணோர் லைக் செய்து ஆதரவளித்துள்ளனர். இதுவரை 1 லட்சம் டாலருக்கும் மேல் குவிந்துள்ள நிதியால் சிகிச்சை மூலமாக தங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவரது பெற்றோர்களுக்கு அதிகரித்துள்ளது.
Average Rating