மெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…!!
ஹாங்காங் பகுதியைச் சேர்ந்த, கொவ்லூன் நகரில் மெக்டோனால்ட் உணவகத்தில், இறந்துகிடந்த வீடிழந்த மூதாட்டி, சுமார் ஏழு மணிநேரத்துக்கு பின்னர், நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
சுற்றுலா, ஷாப்பிங் என இருபத்துநான்கு மணிநேரமும் கொண்டாட்டமாக இருக்கும் கொவ்லூன் நகரில் 24 மணிநேரமும் இயங்கும் மெக்டோனால்ட் உணவகத்தில் ஒரு மேசை மீது சரிந்து கிடந்த மூதாட்டியை சுமார் ஏழு மணிநேரமாக யாரும் கண்டுகொள்ளாத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு இந்த உணவகத்துக்குள் தனியே நுழைந்த, இந்த மூதாட்டி, நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தனது மேசைமீது சரிந்து உயிரிழந்துள்ளார். எனினும், 3-ம் தேதி காலை 8.30 மணி அளவில், இந்த உணவகப் பணியாளர் கவனித்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு வரும்போதும் நிறையப் பேர் இங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. மெக்டோனால்ட் உணவக நிர்வாகி இதுபற்றிப் பேசும்போது ‘வாடிக்கையாளர் தமக்கு விருப்பமான உணவை தாமே ஆர்டர் செய்து வாங்கிச் செல்வர். அத்துடன், அவர்களுக்கு இனிமையாக உண்ணும் சூழலுக்காக, வாடிக்கையாளர்கள் தமது தேவைக்காக அழைத்தாலன்றி நாங்கள் தொந்தரவு செய்வதில்லை’ என்றார்.
இதுபோன்ற கடைகளில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தொண்டை அடைத்துக் கொண்டாலும், தண்ணீரைக் கேட்டால்தானே வழங்குவார்கள்! இவர்களது சர்வீஸ் டேக்ஸ் தவிர வேறெதிலும் சர்வீஸை எதிர்பார்க்க முடியாது! என இச்சம்பவம் பற்றிய செய்தியை அறிந்த உள்ளூர்வாசிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
Average Rating