இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக கரீனா ஆட்டம்!

Read Time:1 Minute, 47 Second

kareenakapoor170_15112007.jpgஇந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக பாலிவுட் ஹாட் ஸ்டார் ஷாருக் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கல் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. நான்காவது போட்டி குவாலியரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி லக்னோவில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகிழ்விப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சஹாரா குரூப் ஏற்பாடு செய்திருந்தது. சஹாரா சிட்டியில் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில், இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பான விருந்தோம்பலையும் சஹாரா குரூப் அளித்து கெளரவித்தது. நடந்த கலை நிகழ்ச்சியில் ஷாருக்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று ஆடிப் பாடினர். கலை நிகழ்ச்சியைக் கண்டு கழித்த மகிழ்ச்சியுடன் இரு நாட்டு வீரர்களும் தனி விமானம் மூலம் குவாலியருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாஜ்பாயுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு…!
Next post சிக்கிம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகள் கற்பழிப்பு