மனநிலை பாதித்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 50 வயது காமக்கொடூரனுக்கு வலை..!!
Read Time:1 Minute, 24 Second
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காம்டிபடா கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் செல்வார். இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த யஷ்வந்த் ராயத் என்ற 50 வயது நபர், அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால், நேற்று அந்தப்பெண் தனது தாயிடம் விவரத்தைக் கூற, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி சகாப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, யஷ்வந்த் ராயத்தை தேடிவருகின்றனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Average Rating