டெங்கு குறித்து அவதானம்…!!
Read Time:1 Minute, 2 Second
டெங்கு நோய் தொற்கு குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
மழைக்கு பிந்திய காலம் என்பதால், டெங்கு நோய் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றம் கம்பஹா மாவட்டங்களில் இந்த நிலையில் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயினால் இதுவரையில் நாடெங்கிலும் 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 50 பேர் வரையில் மரணித்துள்ளனர்.
இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தமது வீட்டுச் சூழலில் நீர் தேங்கி நிற்காத வண்ணம் சுத்தமாக பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Average Rating