காசு கொடுத்து மாணவனுடன் உடலுறவு கொண்ட இந்திய ஆசிரியர்: அமெரிக்காவில் கைது..!!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆசிரியர் ஒருவர், பணம் கொடுத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள பிராங்க்ளின் என்ற நகரைச் சேர்ந்தவர் மிஹிர்பாய் படேல். இந்தியரான இவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் ஆன்லைனில் ஒரு மாணவனிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து சாட் செய்து நெருங்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் மிஹிர்பாய் படெல் மாணவனை உறவுக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து இருவரும் முதலில் ஒரு மோட்டலில் வைத்து சந்தித்து தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த மாணவனுக்கு 150 டாலர் பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போய் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது 200 டாலர் பணம் கொடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவன் மைனராக இருந்தாலும் அந்த குற்றத்துக்காக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
ருப்பினும் காசு கொடுத்து உறவு வைத்துக் கொண்டதால் விபச்சாரத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Average Rating