இரவு விடுதி உரிமையாளர் கொலை – எஸ்.எப்.லொக்கா கைது…!!

Read Time:1 Minute, 35 Second

2137128359Untitled-1அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே ஆசிரியருமான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க என்ற குறித்த சந்தேகநபர், சிலாபம் பகுதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளை இன்று இரவு 07.30 அளவில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதிக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, அந்த விடுதியின் உரிமையாளர் வசந்த சொய்சாவையும் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் முன்னதாக 20 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்பட்ட எஸ்.எப்.லொக்காவின் சகோதரர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா வரலாற்றில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் அதிக அளவில் பெண்கள்..!!
Next post ரஷ்ய விமான விபத்து இலங்கை ஜனாதிபதி இரங்கல்…!!