வவுனியா ஏ9 வீதியில் ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது..!!
Read Time:1 Minute, 4 Second
வவுனியா ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ்ரக வாகனம் தடம் புரண்டு வீட்டுக்குள் புகுந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் புளியங்குளம், புதூர் சந்தியைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது.
இதனால் வீட்டின் சுவர் மற்றும் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், வாகனமும் முழுமையாக சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பலர் பயணித்த போதும் சிறு காயங்களுடன் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating