மதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…!!
Read Time:1 Minute, 10 Second
அவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது23). இவரது உறவினர் வீடு மதுரை ரேஸ்கோர்சில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. இங்கு சங்கீதா அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நேற்றும் அங்கு வந்த அவர் இன்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்று தனது உடலில் தீ வைத்து கொண்டார்.
குளியல் அறையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கதவை உடைத்தனர். ஆனால் அதற்குள் சங்கீதா உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காவலர் குடியிருப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating