துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த விபரீதம்: காதலியின் குழந்தையை சுட்டுக்கொன்ற வாலிபர்…!!

Read Time:2 Minute, 19 Second

gun_child_003அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் அவரது காதலியின் 7 மாத குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ரோம் நகரை சேர்ந்தவர் ஹென்றி பார்டில்(18).

ஹென்றி மற்றும் அவரது காதலி செலினா ஹிட்(19) இருவரும் திருமணமாக செய்யாமலேயே கடந்த யூன் மாதம் முதல் ஒன்றாக வசித்து வருகின்றனர். செலினாவுக்கு நதானியல் ஹிட் என்ற 7 மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனது துப்பாக்கியை ஹென்றி சுத்தம் செய்துள்ளார். அப்போது துப்பாக்கியினுள் குண்டு இருந்துள்ளது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக துப்பாக்கியை அவர் அழுத்தியதில் குண்டு பாய்ந்து குழந்தை நதானியல் சம்பவ இடத்திலேயே பலியானது.

செலினா மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் சம்பவத்தின் போது அங்கு இருந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் ஹென்றியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி டிம் பேட்ஸ் கூறுகையில், கடந்த வெள்ளியன்று ஹென்றி வேட்டைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அடுத்த நாள் தனது துப்பாக்கியை சுத்தம் செய்ய அவர் முயன்றபோது குண்டு வெடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் செலினாவின் தந்தையான கேரி முண்ட்ஸ் தனது பேரனின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானிய இளவரசர் ஹரியின் பிரிவை தாங்க முடியாமல் அழுத நான்கு வயது ரசிகை…!!
Next post 2019 முதல் 2050 வரை அதிநவீன வளர்ச்சி இப்படி தான் இருக்குமோ…!!