பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு..!!
பிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார்.
சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என ஜுகர்பெர்க் தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு உயிலும் எழுதியுள்ளனர்.
அதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தனது மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்குவதற்காக தனது செல்வம் முழுவதையும் தருவதாகவும் இந்த தம்பதியர் உறுதி அளித்துள்ளனர்.
Average Rating