மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற கணவன் கைது…!!
Read Time:52 Second
தனது மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கணவர் புத்தளம் – இஹல கடுனேரிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டதன் பின் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட காவற்துறையினர், தப்பிச்சென்ற கணவரை இஹல கடுனேரிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
28 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
Average Rating