கொள்ளுப்பிட்டியில் கொள்ளையிட்ட இரு பாகிஸ்தானியர்கள் கைது…!!
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் இரத்தினக் கற்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இவர்கள், சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை, கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையில் அந்தப் பகுதி விடுதியொன்றில் தங்கியிருந்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் 3650 அமெரிக்க டொலர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating