அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 வயது சிறுவன்…!!
Read Time:1 Minute, 15 Second
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்துள்ள சம்பவம் பெற்றோர்களை பதைபதைக்க செய்துள்ளது. அங்குள்ள பக்சான்பூர் என்ற கிராமத்தில், கடந்த திங்கள் அன்று மாடியில் காயும் துணியை எடுப்பதற்காக சென்ற 7 வயது சிறுமியை பக்கத்து மாடியில் இருந்த 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து, அந்தச் சிறுமி திக்கி திக்கி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறாள்.
சிறுமியின் தந்தை வெளியூரிலிருந்து நேற்றுதான் வந்தார். அவர் வந்தவுடன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தலைமறைவாகி விட்ட அந்த சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating