கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஐந்துபேர் பலி…!!
கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்துபேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
இங்குள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26 ஆண்டுகால கனடா நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போது நடந்துள்ள இந்த கொடூர தாக்குதல் குறித்து உலக பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சென்றிருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயு கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய மர்மநபரை பாதுகாப்பு படையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக அருகாமையில் இருக்கும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating