முதலாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவன்…!!
இந்தியாவின் திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவன் ஒருவனை 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு முதலாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்ற 6ம் வகுப்பு மாணவன், கல்லால் தாக்கியுள்ளான்.
இதனை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கழிவறைக்குள் சென்று பார்த்த ஆசிரியர்கள் தலையில் இரத்த காயங்களுடன் அந்த மாணவன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
6ம் வகுப்பு மாணவனை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating