3 மாணவிகள் தற்கொலை வழக்கில் தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்…!!
விழுப்புரத்தில், 3 மாணவிகள் தற்கொலை வழக்கில், தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் பிப்ரவரி 2ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் கோவை வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்நிகழ்ச்சி, தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தின் முதல் துவக்கமாக இருக்கும். தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
தற்கொலை எண்ணம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசும், கல்வித்துறையும் இணைந்து மாணவ,
மாணவிகளுக்கு கவுன்சலிங் அளிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 3 கல்லூரி மாணவிகள் தற்கொலை வழக்கில் முறைப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Average Rating