சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்..!!
Read Time:1 Minute, 14 Second
யாழ் சாவகச்சேரி பகுதியில் மூன்று கோடியே 90 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரான பெண் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏழு கிலோகிராம் பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating