கழிவுநீர் கால்வாயில் பிஞ்சு குழந்தையின் உடல்: விசாரணையை முடுக்கி விட்ட பொலிஸ்..!!
பிரித்தானியாவில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து பிஞ்சு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கிரிம்ஸ்பி நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதனை அகற்றும் நோக்கில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து பிளம்பர் ஒருவரை வரழைத்துள்ளனர்.
இந்நிலையில் கழிவுநீர் சீராக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டபகுதியில் சீர் செய்து வந்த பிளம்பர் அங்கு பிஞ்சு குழந்தையின் உடல் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்த அவர், அவர்கள் வந்து சேர்ந்ததும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள போதும், பொலிசாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலை கைப்பற்றிய பகுதியினை பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குழந்தை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள பொலிசார்,
குழந்தையின் தாயார் உடனடியாக முன்வந்து பொலிசாரிடம் சரணைடைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குழந்தை மற்றும் அதன் தாயார் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தி உதவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Average Rating