இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்..!!
Read Time:1 Minute, 8 Second
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் – ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.< ராமேஸ்வரம் பகுதி மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். இலங்கை தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதேநேரம், எதிர்வரும் 29ம் திகதி சென்னையில் உள்ள இந்தியாவுக்கான இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
Average Rating