14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை கைது..!!
Read Time:1 Minute, 14 Second
குருநாகல் கொங்கல்ல தோட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் என காவற்துறை தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பல முறை சந்தேக நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சந்தேக நபரின் அச்சுறுத்தல் காரணமாக தாயிடம் சிறுமி இதனை மறைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுமி பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த சந்தேக நபர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 40 வயதினையுடையவர் குறித்த சிறுமி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Average Rating