பீஜி அனர்த்த சேதவிபரங்கள் சேகரிப்பு..!!
Read Time:1 Minute, 4 Second
வரலாற்றில் இடம்பெறாத வகையில் பசிவிக் தீவான பீஜியை தாக்கிய அதிசக்தி வாய்ந்த சூறாவளியினால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
320 கிலோ மீட்டர் வேகத்தில் ஏற்பட்ட இந்த சூறாவளியினை அடுத்து மழையுடன் வெள்ளமும் ஏற்பட்டுள்ளதுடன் 12 மீட்டர் உயரத்திற்கு அலை அடித்துள்ளன.
பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலைவரையிலான காலப்பகுதியினில், 750 முகாம்கள் திறக்கப்பட்டு மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Average Rating