விபத்தில் சிறுவன் பலி – மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்…!!
Read Time:1 Minute, 6 Second
கடுகஸ்தோட்டை – தித்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி சுவரொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த நான்கு சிறுவர்கள் மற்றும் சாரதியும் காயமடைந்த நிலையில் கடுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், வடகொட பகுதியைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் மற்றும் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating