வவுனியாவில் தமிழ் பெண்களை மணந்த இராணுவத்திற்கே வீடாம்…!!

Read Time:1 Minute, 44 Second

blogger-image--1298019166வவுனியா கொக்குவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கான 51 வீடுகளை கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்திலுள்ள வீடுகளில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண்களை திருமணம் முடித்த இராணுவத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 56வது படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டம் நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வை அடிப்படையாக கொண்டதென பாதுகாப்பு அமைச்சின் செயலர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி நல்லிணக்க படை வீரர் கிராமம் நாற்பது பேர்ச் வீதம் எண்பது காணித்துண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐம்பத்தியொரு வீடுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு, இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண் களை திருமணம் முடித்த இராணு வத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி…!!
Next post விபத்தில் இருவர் படுகாயம்..!!