நான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..!!
Read Time:1 Minute, 4 Second
நுவரெலியா – லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லவர்சிலிப் தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் குழந்தையின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Average Rating