இங்கிலாந்தில் இந்திய வாலிபர் படுகொலை…!!
Read Time:1 Minute, 23 Second
இங்கிலாந்தில் இந்திய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள ஐஸ்லோ வொர்த் பகுதியை சேர்ந்தவர் சகில்ராய் (28). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகேயுள்ள ரோட்டில் இவர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவரை ஐஸ்லேவொர்த்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதை தொடர்ந்து சகில்ராயை கொலை செய்ததாக 22 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய போது, ‘பணத்துக்காக சகில்ராயை கொலை செய்ததாக அவன் தெரிவித்தான். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating