ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்: உடல் சிதைந்து பலியான பரிதாபம்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் ரயில் மோதி உடல் சிதைந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Lyssach என்ற நகரத்தில் தான் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் வாலிபர் ஒருவர் ரயில் அங்குள்ள நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், அவசரம் என்பதால் அவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.அப்போது, அவ்வழியாக RegioExpress என்ற அதிவேக ரயில் வந்ததை அவர் கவனிக்க தவறியுள்ளார்.
எனினும், தண்டவாளத்தை நபர் ஒருவர் கடக்க முயல்வதை கண்ட ஓட்டுனர் அவசரகால பிரேக்கை செயல்படுத்தியுள்ளார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த அந்த ரயில் நபர் மீது பலமாக மோதி தூக்கி வீசியுள்ளது.
சில அடிகள் தூரத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அந்த நபர் உயிருக்காக போராடியுள்ளார்.விபத்து அறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
ஆனால், பலத்த காயமடைந்த அந்த நபர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.பொலிசார் விசாரணை நடத்தியபோது அவர் மட்டுமே ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளார்.
மேலும், நபரின் உடல் சிதைந்துள்ளதால் அவரை பற்றி தகவல் சேகரிக்க பொலிசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating