முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிபடும் 4 வயது சிறுவன்: பெற்றோர் கண்ணீர்..!!
பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் 4 வயதாகிறது. இந்த சிறுவனுக்கு முகத்தில் புற்றுக்கட்டி உள்ளது.
புற்று நோயால் முகம் பெரிதாக வீக்கம் அடைந்து இந்த சிறுவன் மிகவும் அவதிப்பட்டு வருகிறான். அவனது முகத்தை பார்த்து மற்ற குழந்தைகள் பயப்படுவார்கள் என பள்ளிக்கு கூட அவனது பெற்றோர் அனுப்ப தயங்குகிறார்கள்.
சிறுவன் ராஜ்குமாருக்கு கடந்த 1½ ஆண்டாக இந்த புற்றுக்கட்டி உள்ளது. இவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் குணமாகும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சிறுவனுக்கு அறுவைசிகிச்சை செய்ய கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்வந்துள்ளதாக சிறுவனின் தந்தை ராஜ்குமார் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “எர்ணா குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சை அளிக்க முன்வந்தாலும் அவர்கள் தரப்பிலும் என்னிடம் மற்ற செலவுக்கும் உங்களால் முடிந்த பணத்தை புரட்டி தாருங்கள் என்று கூறி உள்ளனர். தினமும் கூலி வேலைக்கு போகும் என்னால் அவ்வளவு பணத்தை புரட்ட முடியவில்லை. இதனால் கருணை உள்ளம் கொண்டவர்கள் எனக்கு உதவி செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்று கூறி உள்ளார். 8089562856 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating