பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…!!
கிழக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை வாங்கி தருவதாக 17 வயது சிறுமியை ரமேஷ் என்ற வாலிபர் அழைத்து சென்று உள்ளார். வீட்டு வேலை செய்து வந்த அந்த சிறுமிக்கு ஏற்கனவே ரமேஷை தெரியும் என்பதால் அவருடன் பள்ளிக்கு சென்று உள்ளார்.
பள்ளி சென்றதும் அங்கு சிறுமியை ரமேஷ் மற்றும் காவலாளி கோவிந்த் ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மற்றும் கோவிந்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல், மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சாக்லேட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating