வைத்தியரின் மாலையை திருடியவர்கள் விளக்கமறியலில்…!!
திருகோணமலை பிரதேசத்தில் வைத்தியர் ஒருவரின் மாலையை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வனந்த பெர்ணாண்டோ இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த மாதம் திருகோணமலை பிரதேசத்தில் வைத்தியர் ஒருவரின் மாலையை அபகரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்ற நிலையிலே குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்தேகநபர்கள் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நிலையிலே நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திருகோணமலை, விஜித்தபுர பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய ஒருவரும், மற்றவர் சமன்புர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று(4) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Average Rating