பெண்ணோடு பெண் உறவு கொள்ள காரணம் என்ன என்று தெரியுமா…!!

Read Time:4 Minute, 23 Second

Girls-9இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி பெற்றிருக்கின்றனராம்.

வெளிநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பெண்கள் ‘லெஸ்பியன்’ உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

* பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்கையாக ஒர பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம். ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.

* உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது.

* ஆண்களின் ஓரினச்சேர்க்கையான ஹோமோ செக்ஸில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் லெஸ்பியனில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. மாறாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை. இருப்பினும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளலாம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி… பாருங்க அசந்து போயிடுவீங்க..!! வீடியோ
Next post தம்மாத்துண்டு சிறுவன் பெண்களை எப்படி உஷார் பண்றானு பாருங்க…!! வீடியோ