திருச்செங்கோடு அருகே மூதாட்டியை கத்தியால் குத்தி நகை-பணம் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நைனாம்பாளையம் ஆனைக்கல் காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.
நேற்று இரவு இவர் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் இவரது தாயார் பெருமாயி (80), மனைவி லட்சுமி (55), மகள் பிரேமா (32), இரட்டை பேரக் குழந்தைகள் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
நேற்று இரவு 9-30 மணிக்கு முகமூடி அணிந்த 6 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் முகத்தில் கர்சீப் கட்டி இருந்தனர். கறுப்பு பேண்டும், கறுப்பு சட்டையும் அணிந்த இருந்தனர். 6 பேரும் கத்திமுனையில் 3 பெண்களையும் மிரட்டினர். வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்து தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் மறுக்கவே பெருமாயி கையில் கத்தியால் குத்தினர்.
இதில் 2 கை விரல்களில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. உடனே லட்சுமி மற்றும் அவரது மகள் ஆகியோர் பயந்து போய் நகை மற்றும் பணம் இருக்கும் இடத்தை காட்டினர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 48 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் 60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
வீட்டிற்கு திரும்பி வந்த ராமசாமி கொள்ளை நடந்தது குறித்து அறிந்து மொளசி போலீசுக்கு தகவல் கொடுத்தார். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்வரன், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரெண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கும்பலா? அல்லது வடமாநில கும்பலா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விவசாயி ராமசாமிக்கு யாராவது விரோதிகள் உள்ளனரா என்றும் விசாரணை நடத்தினார்கள்.
மோப்பநாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating