பெண்ணின் சடலம் மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்..!!
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா சடலத்தை பார்வையிட்டதுடன், வட்டக்கச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா? என்ற பலகோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating