திருமணமான 4 நாளில் புதுப்பெண் மாயம்…!!
சென்னை கோயம்பேடு மங்கம்மாள் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 30). தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிதா (21) என்ற பெண்ணுக்கும் 4 நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கவிதாவை அழைத்துக் கொண்டு நாகராஜன் கோயம்பேடு வந்தார்.
நேற்று கவிதா வீட்டில் இருந்தார். நாகராஜன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வேலை முடிந்து நாகராஜன் வீடு திரும்பிய போது கவிதாவை காணவில்லை. அவர் எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் நாகராஜன் புகார் செய்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating