மன்னாரில் கருவாடு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்…!!
மன்னார் நகர் பகுதியில் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பதப்படுத்தப்பட்ட கருவாடு விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தின் காரணமாக குறித்த கடையில் உள்ள பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் தீயில் கருகியுள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் கருவாடு விற்பனை நிலையம் காணப்படுவதாகவும், தீ விபத்தினால் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான கருவாடு வகைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாகவும் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இன்றைய தினம் காலை முதல் மதியம் 12 மணிவரை குறித்த கடை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. 12 மணியளவில் கடையை பூட்டிவிட்டுச் சென்று சிறிது நேரத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இது வரை தெரியவில்லை எனவும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating