வடக்கு மக்களிற்காக பொலிஸ் அவசரசேவை…!!
வடக்கில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பொலிஸ் அவசரசேவைக்கு தமிழ்மொழியிலேயே மேற்கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாதானம், ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான தொலை பேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 076 – 6 224 949 அல்லது 076 – 6 226 363 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்
மேலும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் காங்கேசன்துறை மக்களுக்கும் இந்த வசதி செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating