ஆற்றிலே சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்..!!
Read Time:1 Minute, 1 Second
மட்டக்களப்பு-கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று(12) இரவு மீனவர்களால் மீட்கப்பட்டது.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த சசிகலா மணியம்(27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த இவர், இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் கணவர் ஏற்கனவே விபத்தில் மரணித்தவர் எனவும் கூறப்படுகின்றது.
குறித்த பெண்ணின் சடலத்தில் முதலை கடித்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
மேற்படி மரணத்திற்கான காரணம் சரியாகக் கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating