சென்னையில் இன்று திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…!!
Read Time:1 Minute, 17 Second
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொதுச் செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா மீது, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் அபாண்டமாக குற்றம் சாட்டி காவல் துறையினரிடம் புகார் வழங்கியதை கண்டித்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
படப்பிடிப்புகள், பாடல் பதிவு, எடிட்டிங், டப்பிங் ஆகிய சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் எதுவும் நடைபெறாது. நேற்று நடந்த செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Average Rating