விமானம் வெடித்து 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்த பெண்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்…!!
நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீ உயரத்திலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பணிப்பெண் ஒருவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செர்பியா நாட்டை சேர்ந்த Vesna Vulovic(அப்போதைய வயது 23) என்ற இளம்பெண் கடந்த 1972-ம் ஆண்டு JAT Flight 367 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதே ஆண்டு ஜனவரி 26-ம் திகதி சுவீடன் தலைநகரான Stockholm நகரிலிருந்து செர்பியா தலைநகரான Belgrade நகருக்கு அந்த விமானம் 28 நபர்களுடன் பயணமாகியுள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. விமானம் வெடித்ததும் பணிப்பெண் உள்ளிட்ட 27 பேரும் விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
சுமார் 10,160 மீற்றர்(10 கி.மீ) உயரத்திலிருந்து விழுந்த 27 பேரும் உடல்கள் சிதைந்து பலியாயினர். ஆனால், பணிப்பெண் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
மீட்புக் குழுவினர் விமானப்பாகங்கள் கிடந்த இடத்தில் பணிப்பெண் உயிருடன் இருப்பதை பார்த்து வியப்புடன் அவரை காப்பாற்றியுள்ளனர்.
எனினும், பணிப்பெண்ணின் இருக்கால்களும் உடைந்தது. தலையில் பலமாக காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் தொடர்ந்து 27 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.
பின்னர், சுயநினைவு திரும்பிய பிறகும் சுமார் 16 மாதங்கள் சிகிச்சை மேற்கொண்டார்.
உலக வரலாற்றில் சுமார் 10 கி.மீ உயரத்தில் இருந்து இதுவரை யாரும் பாராசூட் இல்லாமல் குதித்தது இல்லை என்பதால் பணிப்பெண்ணின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
தற்போது 66 வயதை அடைந்துள்ள அவர் செர்பியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரை அவரது சகோதரர் செல்போனில் தொடர்புக்கொண்டார். ஆனால், அவரிடம் இருந்த எந்த பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.
இவரது இறப்பின் காரணம் குறித்து தகவல் எதுவும் வெளிவராத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating