இரண்டு மகன்களையும் பேரனையும் கொல்ல அனுமதி கேட்கும் வயோதிபர்..!!
அபூர்வமான தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மகன்கள் மற்றும் பேரனை கருணை கொலை செய்வதற்கு வயோதிபர் ஒருவர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது.
பங்களாதேஷிலுள்ள மெஹெர்பூர் பகுதியில் வசிக்கும் டோபாஷால் ஹசைன் என்பவரின் 24 வயது மற்றும் 13 வயது மகன்கள் மற்றும் 8 வயதான பேரன் என்போர் அபூர்வமான தசை நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாதாரண பழம் வியாபாரியான ஹசைன் தனது சேமிப்புகள் அனைத்தையும் வைத்திய சிகிச்சைக்காக செலவழித்து, இறுதியாக தனது கடையையும் விற்றுள்ளார். இருப்பினும் நோயை குணமாக்க முடியாது போயுள்ளது.
நோய் பாதித்துள்ள தனது 2 மகன்கள் மற்றும் பேரனை மருந்து மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் படி அந்நாட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.
குறித்த மனு தொடர்பான தகவலால் அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடுப்பதவர்களை கண்காணிக்குட்படுத்தியுள்ளதோடு , ஊடகங்களிலும் குறித்த விடயம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
Average Rating