யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ். விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating