மட்டக்களப்பில் நான்கு இளைஞர்கள் காணவில்லை மேலும் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..
Read Time:1 Minute, 21 Second
மட்டக்களப்பு நகரில்வைத்து 4தமிழ் இளைஞர்கள் கடந்த 3ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் அத்துடன் வவுணதீவு இளம் விவசாயி ஒருவர் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் அதேதினத்தில் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமைகள் காரியாலயத்தில் காணாமல்போனவர்களின் உறுப்பினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது காணாமல் போனவர்கள் எல்லைவீதியைச் சேர்ந்த யோகேந்திரன் ஜோசன் வயது20 சேத்துக்குடாவில் இருந்துவந்த மகேசன் பெர்னாட் வயது22 ஜெயந்திபுரத்தைச்சேர்ந்த ஹரி முகுந்தன் வயது20 மற்றம் மாமாங்கத்தை வசிப்பிடாக கொண்ட பெர்ணான்டோ பிரசாத் வயது20 ஆகியோர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது அத்தடன் கடத்தப்பட்டவர் வவுணதீவைச சேர்ந்த விவசாயியான 27 வயதுடைய கிருபைராஜா ரமணன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating